Ads Area

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்!

சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.


வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போதே மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.


இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (13) முற்பகல் வேளையில் நடைபெற்றுள்ளது.


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு சென்னக்கிராமம் பகுதியில் வீட்டுவேலை செய்துகொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்த (வயது 60) நபரே மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.


மரணமடைந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe