பாறுக் ஷிஹான்.
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டியொன்று காணாமற்போன சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமைய பொலிஸ் நிலையப்பிரிவிற்குட்பட்ட மாநகர தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக கடந்த 13.02.2025 அன்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பச்சை நிறம் கொண்ட ABI-4194 இலக்கமுடைய முச்சக்கர வண்டியே காணாமற்போயுள்ளதாக 14.02.2025 அன்று முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் பணிப்புரைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் கல்முனை குற்றப்புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமை குழுவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் 067 2229 222 என்ற தொலைபேசிக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.