Ads Area

டான் பிரியசாத் கொலை: சந்தேகத்தின் பேரில் மூவர் கைது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொலன்னாவ உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் டான் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு தகவல் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.


வெல்லம்பிட்டிய லக்ஸந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது உறவினர் வீட்டில் நேற்றிரவு டான் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்டார்.


சம்பவத்தில் படுகாயமடைந்த டான் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் வீட்டிற்குள் புகுந்து டான் பிரியசாத்தை சுட்டுவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe