Ads Area

கதிரையில் அமர்ந்தவாறு காணப்பட்ட ஏறாவூர் நபரின் சடலம்: சம்மாந்துறை விளினியடிப் பகுதியில் சம்பவம்!

 (பாறுக் ஷிஹான்)


3 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக கருதப்படும் ஒருவரின் சடலம் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில்  சம்மாந்துறை பொலிஸரால் மீட்கப்பட்டது.


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விளினையடி சந்தி பகுதியில் உள்ள  சிகை அலங்கார கடை ஒன்றில் காணப்பட்ட இந்தச் சடலம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலில் இன்று(15) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.


சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டது.  


உயிரிழந்தவர் வாடகை கடையில் சிகை அலங்கார கடை நடத்தி வந்தவர் என்பதுடன் மட்டக்களப்பு மாவட்டம்  ஏறாவூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில்  தெரிய வந்துள்ளது.


மேலும் குறித்த நபர் வேலையின் நிமித்தம்   சிகை அலங்கார கடை  வேலைகளை முடித்து கடையறைக்குள் இரவு  உறங்குபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இவ்வாறான நிலையில் மூன்று நாட்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் தெரியவந்துள்ளது.


கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர். 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe