வவுனியாவின் ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை நடந்த வீதி விபத்தில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக ஓமந்தை காவல்துறை தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றபோது, எதிர் திசையில் வந்த டிப்பர் லாரியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்திய துணைத் தூதரக ஊழியரான 52 வயதுடைய அதிகாரி ஒருவரே இவ் விபத்துச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த அவரது மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.