பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் இன்று ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவியது, கல்வியமைச்சின் அதிகாரிகளிடம் தங்களின் தீர்க்கப்படாத தொடர்ச்சியான குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி ஆசிரியர்கள் குழு ஒன்று அமைச்சின் வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சின் கட்டிடத்திற்குள் தரையில் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை அமைதியான முறையில் வெளிப்படுத்தினர். தங்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு தீர்வுகளைப் பெற்றுத் தரும் வரை ஆர்ப்பாட்டத்தை நிறுத்தப்ப போவதில்லை எனவும் அவர்கள் கூறினர்.
செய்தி மூலும் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.