குவைத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் போலி முகவரிகளின் கீழ் வசிக்கும் சுமார் 12,500 வெளிநாட்டினரின் முகவரிகள் அமைச்சக Data அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மங்காஃப் தீ விபத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டு பேச்சுலர் அதிகமாக வசிக்கின்ற பல பகுதிகளில் அரசாங்கம் சோதனைகளை கடுமையாக்கியதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை செய்ய முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவில் அடையாள அட்டையில் பதிவுசெய்யப்பட்ட முகவரியும், அட்டைதாரர் வசிக்கும் உண்மையான முகவரியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் உள்ள கடுமையான சட்டம் ஆகும். இதற்காக, சிவில் தகவல்களுக்கான பொது ஆணையம், வெளிநாட்டினர் தங்கள் முகவரியை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் முகவரிகளைப் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பை பின்பற்றாத சிவில் அடையாள அட்டை வைத்திருப்பவர்களின் முகவரிகள் அமைச்சக Data அமைப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவற்றைப் புதுப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
ஒரு மாதத்திற்குள் முகவரியைப் புதுப்பிக்காதவர்களுக்கு 100 தினார் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு நீக்கப்பட்ட முகவரிகளில் பெரும்பாலானவை ஹவாலி, ஜிலீப், மஹபுல்லா, மங்காஃப் மற்றும் ஃபர்வானியா பகுதிகளில் உள்ள முகவரிகளைக் கொண்ட வெளிநாட்டினரின் முகவரிகளாகும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.