குவைத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் ருமைதியா பகுதியில் ஒரு குவைத்தி இளம் பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கில் இறுதி விசாரனை முடித்து அப்துல் வஹாப் அல்-முய்லி தலைமையிலான குற்றவியல் நீதிமன்ற குழு (18/05/25) ஞாயிற்றுக்கிழமை ஒரு இளம் குடிமகனுக்கு மரண தண்டனை விதித்தது.
உயிரிழந்த பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் வைத்து கற்பழித்து அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்தார், பின்னர் உடலை ஒரு பையில் வைத்து தனது வீட்டிற்கு வெளியே எடுத்துச் சென்று,தப்பி ஓடிய அவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக அதிகபட்ச தண்டனை கோரி, பொதுநல வழக்குரைஞர் குற்றவியல் நீதிமன்றத்தில் வாதித்தது குறிப்பிடத்தக்கது.
அவர் வேண்டுமென்றே பாதிக்கப்பட்டவரை திட்டமிட்டு கொன்றதாகவும் அவர் வாதாடினார். இதையடுத்து அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலை வழக்கு விசாரணைக்கு பிறகு அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.