நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக நாடளாவிய ரீதியில் தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று (11) திருகோணமலையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டிய அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் உறுப்பினர்களும் தங்களது சத்தியப் பிரமாணங்களை கட்சியின் தலைவர் முன்னிலையில் மேற்கொண்டனர்.