சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லுாரியில் சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த வாரம் தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 2025 மே 30ம் திகதி முதல் ஜூன் 5 வரயான நாட்களில் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களையும் பாடசாலை நிர்வாகம் ஒழுங்கு செய்தி நடாத்தி வருகின்றன.
பாடசாலை சுற்றாடல் கழகமானது சம்மாந்துறை பிரதேச செயலகத்துடன் இணைந்து 2025 ஜூன் இரண்டாம் திகதி 'உயிர் பல்வகைமையை பாதுகாப்போம்' எனும் தலைப்பில் சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்ட மாணவர்களுக்கான செயலமர்வொன்றினை ஏற்பாடு செய்து நடத்தியது.
இந்நிகழ்வுக்கு பாடசாலையின் அதிபர் அஷ்ஷைக் ARM. உவைஸ் நளீமி அவர்கள் தலைமை தாங்கியதுடன், பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் கௌரவ தேசபந்து SLM. ஹனிபா அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்துடன் இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எம் ரியாஸ் அவர்கள், உயிர் பல்வகைமையை பேணி பாதுகாத்தல் என்னும் தலைப்பில் விரிவுரையாற்றினார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறைக் கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ACM. முஸ்தபா, மற்றும் பாடசாலை சுற்றாடல் முன்னோடி பொறுப்பாசிரியர் ஸரீக்கா பானு அவர்களும், சம்மாந்துறை பிரதேச செயலக சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Almarjan Media Unit.