Ads Area

மாவடிப்பள்ளி சுகாதார நிலையத்தில் மலேரியா தடுப்பு பிரிவு : புதிய அலுவலகம் பிராந்திய பணிப்பாளரினால் திறந்து வைப்பு.

 சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கி வந்த பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவு மாவடிப்பள்ளி பிரதேசத்தில் உள்ள சுகாதார நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. குறித்த சுகாதார நிலையத்தில் புதிதாக அமையப்பெற்றுள்ள பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவு காரியாலயம் நேற்று (09) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஐ,எம்.கபீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நாடாவெட்டி குறித்த பிரிவினை திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் உள்ளிட்ட மலேரியா தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe