இலங்கை அரசாங்கம் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ. 45,000/- ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்பத்தின் 12 வாரங்கள் முடிந்ததிலிருந்து, பிரசவத்திற்குப் பிந்தைய முதல் 4 மாதங்கள் வரை, அதாவது மொத்தம் 10 மாதங்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவைப் பெறலாம்.
இந்தக் கொடுப்பனவு ரூ. 4,500/- மதிப்புள்ள 10 வவுச்சர்களாக வழங்கப்படுகிறது.
இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தி தாய்மார்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பதிவு செய்யப்பட்ட கடைகளில் தேவையான ஊட்டச்சத்து உணவுகளை வாங்கிக்கொள்ளலாம்.
இருப்பினும், சிலர் இதனை கொண்டு தங்களுக்கு தேவையான சில ஆடம்பர பொருட்களை கொள்வனவு செய்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, MOH Dr Nowshad Musthafa , சம்மாந்துறை பிரதேச செயலாளர் Mohamed Haniffa ஆகியோரின் வேண்டு கோளுக்கிணங்க கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவை அவர்கள் முறையாகப் பயண்படுத்துகின்றார்களா..? அவர்களுக்கு தேவையான சத்துணவுகளை கொள்வனவு செய்கின்றார்களா..? என்பது தொடர்பில் சம்மாந்துறை MOH ஊழியரான Mrs Yoga Rathy PHM தனது கடமைப் பிரதேசமான சம்மாந்துறை Block J East 1 ல் பரிசோதனையை மேற் கொண்டார்.
தகவல் - MOH Sammanthurai.