இலங்கையில் வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் இருந்தால் அது தொடர்பில் விரைந்து சோதனை மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கேற்ப பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றும் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கைப் பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேலிய குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத நடவடிக்கைகளில் ஈடுபடவும், ஓய்வெடுக்கவும், உணவு மற்றும் பானங்களை அருந்தவும் அவர்களுக்கு வசதிகள் உண்டு மேலும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்ட சபாத் வீடுகளில் (யூத சமூக மையங்கள்) 24 மணி நேர பாதுகாப்பையும் பொலிஸார் வழங்குவார்கள்.
முன்னதாக காசா மோதல் வெடித்ததைத் தொடர்ந்தும், இலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தளங்களுக்கும் குறிப்பாக இஸ்ரேலியர்களுக்கும் உச்ச பாதுகாப்பினை பொலிஸார் வழங்கி வந்தனர்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.