Ads Area

அகில இலங்கை தமிழ் மொழித் தின மாவட்ட மட்டத்தில் கல்முனை கல்வி வலயம் முதலிடம்.

 நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, திருக்கோவில், சம்மாந்துறை ஆகிய வலயங்களைப் பின்தள்ளி அகில இலங்கை தமிழ் மொழித்தின மாவட்ட மட்டத்தில் கல்முனை வலயம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.


கல்முனை கல்வி மாவட்டத்தின் மாவட்ட மட்ட போட்டிகள் அக்கரைப்பற்று  முஸ்லிம் தேசிய பாடசாலையில் மாவட்ட தமிழ் மொழித் தின குழுவின் தலைவர், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.


அக்கரைப்பற்று வலய தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி ஹனீபா இஸ்மாயில் அவர்களின் ஒருங்கிணைப்பில் போட்டிகள் நடந்தேறின. திருக்கோயில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், கல்முனை வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.றியாஸா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.


நான்கு வலயங்களின் பிரதி, உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரிய ஆலேசகர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற நிகழ்வில் மாகாண நிலைக்கான 29 அரங்கப் போட்டிகள்  இடம்பெற்றன. இதில் 16 முதலிடங்களைப் பெற்று கல்முனை வலயம் மாவட்டத்தின் முதல்நிலையினை பெற்று  சாதனை படைத்துள்ளது.


கல்முனை வலயக் கல்வி அலுவலக தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால், ஆசிரிய ஆலோசகர் ஜெஸ்மி மூஸா ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் கிடைத்த இவ் வெற்றிக்காக உழைத்த சகல தரப்பினருக்கும் வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.


வாசிப்பு-பிரிவு 2-அல்-அஷ்ரஃக் தேசிய பாடசாலை எம்.ஐ.எச்.ஸஹானி;  பேச்சு-பிரிவு 4-அல்-அஷ்ரஃக் தேசிய பாடசாலை-எம்.என்.தரீப் அப்துல்லாஹ்;  பேச்சு-பிரிவு 5-கார்மேல் பற்றிமா கல்லூரி-ஏ.ரிஷிபவான்; பாவோதல்-பிரிவு 3-இ.கி.மிசன் பெண்கள் வித்தியாலயம்-எஸ்.கிறிஸ்னவி; பாவோதல்-பிரிவு 4-அல்-அஷ்ரஃக் தேசிய பாடசாலை-பு.சாஹரி; தனி நடிப்பு-பிரிவு 4-அல்-அஷ்ரக் தே.பா-எம்.ஜே.அப்துல்லாஹ்; அறிவிப்பாளர்-பிரிவு-5-அல்-அஷ்ரஃக் தே.பா-ஐ.பாத்திமா றீனா;  இசை தனி-பிரிவு 3--விபுலானந்தா ம.க-வீ.கவின்பிரசாத்; இசை குழு 1-இ.கி.மிசன் வித்தியாலயம்-க.வேகாத்மி; நடனம்-தனி-பிரிவு 2-கார்மேல் பற்றிமா கல்லூரி-ஆர்.யுபாஷனா; நடனம் தனி-பிரிவு 4-கார்மேல் பற்றிமா-க.அஹஸ்ரி;  நடனம்-தனி-பிரிவு 5-விபுலானந்தா மத்திய கல்லூரி-எம்.கிவோக்சிகா ஆகிய மாணவர்களுடன் நாட்டிய நாடகம்-கார்மேல் பற்றிமா கல்லூரி; வில்லுப்பாட்டு-கார்மேல் பற்றிமா கல்லூரி; தமிழறிவு வினாவிடை-அல் அஷ்ரஃக் தே.பா; முஸ்லிம் நிகழச்சி- அல்-அஷ்ரஃக் தேசிய பாடசாலை மாணவ குழுக்களுமே மேற்படி 15 முதலிடங்களைப் பெற்று கல்முனை வலயத்தின் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளன.


வாசிப்பு-பிரிவு 3- அல் அஷ்ரஃக் தே.பா-எம்.சபீக் அய்யாஷ் அரகம்: பாவோதல்-பிரிவு 2- கார்மேல் பற்றிமா கல்லூரி-என்.ஷேத்தரன்யா; இசை தனி-பிரிவு 2-இ.கி.மி. பெண்கள் வித்தியாலயம்-க.லதாங்கி; இசை தனி-பிரிவு 4-இ.கி.மி. பெண்கள் வித்தியாலயம்-சி.யுகஷாயினி; இசை குழு 2-விபுலானந்தா மத்திய கல்லூரி-உ.டக்ஷிகா; நடனம் தனி 1-கார்மேல் பற்றிமா கல்லூரி-சு.அக்ஷன்யா; நடனம் குழு-பிரிவு 3-கார்மேல் பற்றிமா கல்லூரி-சி.அகர்ஷா; நாட்டார் பாடல்- பெரியநீலாவணை விஷ்ணு ம.வி; விவாதம்-அல் அஷ்ரஃக் தே.பா; ஆகியன இரண்டாம் இடங்களையும் இலக்கிய விமர்சனம்-அல் அஷ்ரஃக் தே.பா-றியால் பாத்திமா சுஹா; இசை தனி-பிரிவு 5- விபுலானந்தா மத்திய கல்லூரி-சி.ஜக்க்ஷவி ஆகியோர் மூன்றாம் இடங்களையும் பெற்று வலயத்திற்கு வலிமை சேர்த்துள்ளனர்.


கிழக்கு மாகாண கூத்துக் கலையை உயிர்ப்பிக்கும் நோக்கில் மாகாண மட்டத்தில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் கூத்துப் போட்டிகளில் தென்மோடிக் கூத்தில் சண்முகா மகா வித்தியாலயமும்; இசை நாடகத்தில் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயமும்; விஷேட கூத்தில் சண்முகா மகா வித்தியாலயமும் முதலாம் இடங்களைப் பெற்று திறமைகளை வெளிக்காட்டி உள்ளன.


 கடந்த வருடம் இடம்பெற்ற 38  மாவட்ட நிலை அரங்கப் போட்டிகளில்  21 முதலிடங்களை பெற்றதுடன் 37 போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்று முதலிடம் பெற்ற கல்முனை வலயம் இம்முறையும் கூடுதல் இடங்களை பெற்று முதலிடத்தை தக்க வைத்துள்ளமை பாராட்டுதலுக்குரிய தடயமாகும்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe