சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சாரதி அனுமதிப்பத்திரமில்லாமல் மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு, மோட்டார் சைக்கிளையும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (07) சனிக்கிழமை காலை வேளையில் நடைபெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் வைத்து இக்கைது இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், சில மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
குறிப்பாக, நேற்றுக்காலை வேளையில் மாத்திரம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இச்சோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.