Ads Area

சம்மாந்துறை பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்.

 (சர்ஜுன் லாபீர்)


2005ம் ஆண்டு 13ம் இலக்க பாராளுமன்ற அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் அனர்த்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடித்தேவைகள் தொடர்பாக சம்மாந்துறை பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்  (28) அன்று சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இவ்வுயர்மட்டக் கூட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் போது அதற்குரிய உடனடி நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளல், நிவாரண ஏற்பாடுகள், தற்காலிக இடைத்தங்கள் முகாம்கள் அமைத்தல், இன்னும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.


இக்கூட்டத்திற்கு அம்பாறை மாவட்ட அன்ர்த்த முகாமைத்துவ சேவை பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ சி.எம் ரியாஸ் அவர்களினால் அனர்த்த முகாமைத்துவ முன்னாயுத்த விடயங்கள் மற்றும் அனர்த்த பாதுகாப்பு சம்பந்தமான பொறிமுறைகள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.


இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபைத்தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிராந்திய நீர்ப்பாசனத்திணைக்கள பொறியியலாளர் ஆர்.வேல்கஜன், சம்மாந்துறை மின்சார சபை அத்தியட்சகர் ஏ.டி.எம் நிப்றாஸ், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோகதகர் ஏ.எம்.எம்.நசீம், திணைக்களங்களின் பிரதிநிதிகள், கிராம சேவகர்கள் எனப்பல்வேறுபட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe