பாறுக் ஷிஹான்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இன்று (10.09.2025) முதல் வைத்தியர் ஐ.எல்.எம்.ரிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர் ஐ.எல்.எம்.ரிபாஸ் அம்பாறை மற்றும் கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகப் பணியாற்றியுள்ளதுடன், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக நீண்டகாலம் பணி புரிந்து தற்பொழுது அரச சேவையிலிருந்து வைத்தியர் ஏ.எல்.எப்.ரஹ்மான் ஓய்வுபெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.ரிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (10) கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை புதிய வைத்திய அத்தியட்சகராக கடமையேற்கவுள்ள அவரை விஷேட வைத்தியர்கள், வைத்தியர்கள், கணக்காளர்கள், நிருவாக உத்தியோகத்தர், தாதிய பரிபாலகி, பராமெடிக்கள் உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், அதிபர்ககள், அலுவலக உத்தியோகஸ்தர்கள் அனைவரும் வரவேற்கத்தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.