Ads Area

சம்மாந்துறை வீரமுனை நூலகத்திற்கு அருகாமையில் முச்சக்கர வண்டி கால்வாய்க்குள் பாய்ந்து விபத்து.

 தில்சாத் பர்வீஸ்.

 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை நூலகத்திற்கு அருகாமையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி ஒன்று கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று (03) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.


சம்மாந்துறை மஜீட்புரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு விபத்தில் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவ் விபத்து தொடர்பான மேலதிக  விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe