நூருல் ஹுதா உமர்.
அம்பாறை மாவட்ட, காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி வெள்ளநீரில் மதரஸா மாணவர்களை ஏற்றி வந்த உழவு இயந்திரம் தடம் புரண்டதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணித்தவர்கள் சார்பாக முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணிகள் சம்மாந்துறை நீதிமன்றில் முன்னிலையாகி வகை சொல்ல வேண்டிய அரச அதிகாரிகளுக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 31.10.2025ம் திகதி சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் கெளரவ நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமார் அவர்கள் முன்னிலையில் வழக்கு அழைக்கப்பட்டிருந்தது. இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணிகளான சப்றாஸ் சரீப் மற்றும் எம்.வை. அன்வர் சியாத் ஆகியோர் முன்னிலையாகினர்.
குறித்த வழக்கில் பொலிஸ்மாஅதிபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கையில் சாட்சிகளின் வாக்கு மூலங்களிலுள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் முன்வைத்திருந்ததோடு, இவ்வழக்கில் அரசு அதிகாரிகள் எவ்வாறு அசமந்தமாக செற்பட்டிருந்தனர் என்பதையும் கௌரவ மன்றுக்கு விளக்கினர்.
குறித்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்ட மன்று இவ்வனர்த்த சம்பவத்தில் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் ஆகக்குறைந்தபட்ச கவனத்தையாவது எடுத்திருக்க வேண்டுமென்று விளம்பிருந்ததோடு, இச்சம்பவம் தொடர்பில் முழுமையான புலன்விசாரணை அறிக்கையினை ஆராய்ந்து தோதான கட்டளை ஒன்றினை அடுத்த தினத்தில் (28.11.2025 ஆம் திகதியன்று) பிறப்பிப்பதாக உறுதியளித்திருந்தது.
மீளவும் வழக்கு 28.11.2025 ஆம் திகதியன்று அழைப்புக்காக தவணை வழங்கப்பட்டுள்ளது.

