கனமழை மற்றும் வெள்ளத்தால் அசுத்தமான நீர் மண்ணுடன் தொடர்புகொள்வதால் ஏற்படும் லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) அபாயம் மிக அதிகம்.
முக்கிய தடுப்பு நடவடிக்கை.
Doxycycline (டாக்ஸிசைக்ளின்):
அதிக ஆபத்துள்ள பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் MOH / PHI ஆலோசனையின் பேரில் முன்னெச்சரிக்கை மருந்தாக (Prophylaxis) இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்புக் கவசங்கள்:
ரப்பர் பூட்ஸ் (Gum Boots), கையுறைகள் அணிவது கட்டாயம். காயங்கள் அசுத்தமான நீரில் படாமல் பாதுகாக்கவும்.
அறிகுறிகள் கண்டால் உடனே மருத்துவரை அணுகவும்.
திடீர் காய்ச்சல், கடுமையான தசை வலி (கால்), கண்கள் சிவப்பாதல், மஞ்சள் காமாலை போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். சிகிச்சை தாமதமானால் உயிருக்கே ஆபத்து!
விழிப்புடன் இருங்கள்! பாதுகாப்பாகப் பணியாற்றுங்கள்!
இன்று, வளத்தாப்பிட்டி பகுதியில் விவசாயிகளுக்கு Doxycycling மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டன.
#லெப்டோஸ்பைரோசிஸ்
#எலிகாய்ச்சல்
#Doxycycline


