Ads Area

பிரதேச சபையின் 6வது சபை அமர்வுக்கு முன்னதாக மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர் ரிஸ்விகான்.

சம்மாந்துறை  வீரமுனை வட்டாரத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினரான கௌரவ ரிஸ்விகான் அவர்கள் தனது வட்டாரத்தில் தேர்தல் காலங்களில் தனது வெற்றிக்காக பாடுபட்ட வட்டார பிரதேச மக்களை ஒவ்வொரு மாதமும் ஒன்று கூட்டி அவர்களிடம் வட்டாரத்திற்கான தனது செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள், மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் உத்திகள் தொடர்பில் கலந்துரையாடும் ஒரு வேலைத்திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.


இந்நிலையில் எதிர்வரும் 2025-12-09 அன்று அதாவது நாளை நடைபெறவுள்ள சம்மாந்துறை பிரதேச சபையின் ஆறாவது  சபை அமர்விற்கு முன்னதாக தனக்கு வாக்களித்த வட்டார மக்களுடனாான கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை பிரதேச சபை உறுப்பினர் ரிஸ்விகான்  2025-12-05 அன்று அவரது இல்லத்தில் பிற்பகல் 4 மணியளவில் ஏற்பாடு செய்து அதில் தனது வட்டாரப் பிரச்சினைகள் குறித்து மக்களோடு  கலந்தாலோசனை செய்துள்ளார்.


இக் கலந்துரையாடல் நிகழ்விற்கு வீரமுனைப் வட்டாரத்தில் தனது வெற்றிக்காக பாடுபட்ட சகல துறை சார்ந்த மக்களையும்  ஒன்று கூட்டி தனது அரசியல் செயற்பாடு, வட்டாரத்திற்கான தனது வேலைத்திட்டங்கள் தொடர்பில் எவ்வித ஒழிவு-மறைவின்றி மக்களோடு கலந்துரையாடி  சபை அமர்வில் பேசவிருக்கும் விடையங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து, வாக்களித்த மக்களின் கருத்துக்களும் கோரப்பட்டது.


மேலும் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள-மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்களை எவ்வாறு சேகரித்துக் கொடுப்பது, சிரமதானப் பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது போன்ற பல்வேறு விடையங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து சில ஆக்கபூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe