Ads Area

விதையிடாமல் முளைத்திட்ட பயிர்தான் இனவாதம்.



தொட்டமாய் - தொட்டமாய்
பாட்டம் - பாட்டமாய்
விதையிடாமல்
முளைத்திட்ட - பயிர்தான்
இனவாதம்….

அநீதிக்கு நீ – குரல் கொடுத்தாய்
கூச்சலிட்டுக் குரல் கொடுக்கிறாய்
உன் - கரங்கள் கொழுத்திய
தீ - உன்னையே
சுட்டெரிக்க – காலம் தொலைவிலில்லை!...

புனிதஸ்தலங்களை
புண்படுத்திய பித்தலாட்ட
பிசாசுகளே! – உம்
முகவரிக்கே – முத்திரையிட்டான்
அல்லாஹ்…

திருமறையை – எரித்தீர்கள்
திருமறையிலோ – எஞ்சிய
வசனங்கள்….
உமை – கெஞ்சி மண்டியிட
வைக்கப்போகிறது…

எரித்தவனும், உடைத்தவனும்
தெரியாமல் - பிறந்தவனோ!
அறியமல் - வளர்ந்தவனோ!
திசைதப்பி – திரிந்தவனோ!
யாரரிவார்?

சானியை அள்ளி
தலையில் - வைத்தாலும்
சிரித்துக் கொண்டே
சிம்மானத்தில் (சாக்கடையில்) - இருக்கும்
நம் - அரசுக்கு
பெயரா – நல்லாட்சி….

அன்று,
தம்புள்ளை தொட்டு
கிந்தோட்டை போய்
இன்று,
அம்பாறை வரை
வந்துவிட்ட – உம்
அராஜகங்கள்….

இன்னும் - இன்னும்
வலுக்கவா? – எம்
வாக்குகளை - வழங்கனும்….

சட்டமும், ஒழுங்குமாம்….
சட்டமும், ஒழுங்குமாம்….

சதிகாரர்களுக்கெல்லாம்
பாதுகாப்பை – வலுப்படுத்தி
இனத்துவேசத்தை
நெறிபடுத்தும் - அமைச்சு
தேவையா?....
அதுக்கொரு – பொம்மை
மந்திரி – தேவையா?

கியாஸ் ஏ புஹாரி.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe