முஹம்மட் றிஸ்விகான்.
சம்மாந்துறை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஐ.எம். மன்சூர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கம்பரலிய வேலை திட்டத்தின் கீழ் வீரமுனை வட்டாரத்தின் சென்னல் கிராமம் 1ல் அமைந்துள்ள அல்/அஸ்மான் வித்தியாலய பாதையின் புணர்நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் வேட்பாளரும் சமூக சேவகருமான S.L.A. காதர் அவர்களின் முயற்சியினால் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு இணங்க இப் பாதையின் புணர்நிர்மான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.