தகவல் - முஹம்மட் றிஸ்வான் (ஆசிரியர்)
இலங்கை AAT நிறுவனமும்,கல்வி அமைச்சும் இணைந்து நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சிறந்த வருடாந்த அறிக்கைக்கான தேசிய ரீதியிலான போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம் அம்பாரை மாவட்டத்தில் 1ம் இடத்தை தட்டிக்கொண்டது.
இதற்கான பரிசில் வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாகாநாட்டு மண்டபத்தில் இன்று (27.11.2018) இடம் பெற்றது, இந் நிகழ்வில் கலந்து கொண்டு பாடசாலை அதிபர் திரு. இஸ்மாயில் அவர்கள் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் வெற்றிவாகை சூட வேண்டும் என்று அதிபரின் வழிகாட்டலில் அறிக்கை தயாரிப்பதில் விடுமுறை காலம் என்றும் பாராது ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.