மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (டுபாய்) ல் மனைவியின் கன்னத்தில் நான்கு முறை அறைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது 2000 திர்ஹம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளனர் நீதிபதிகள்.
தனது கன்னத்தில் நான்கு தடவைகள் அறைந்து, உடல் ரீதியாக துன்புறுத்தியதாக மனைவியே கணவர் மீது குற்றம் சாட்டி வழக்குத் தொடர்ந்திருந்தார் குறித்த வழக்கினை விசாரித்த நீதிபதிகளே மேற்படி தீர்ப்பினை வழங்கியிருந்தனர்.
குறித்த கணவன்-மனைவிக்கிடையில் பலர் சமரசம் செய்ய முனைந்த போதும் அதனையும் பொருட்படுத்தாது மனைவி தன் கணவர் மீது வழக்குத் தொடர்ந்து அதில் வெற்றியீட்டியுள்ளதாக Khaleej Times செய்தி வெளியிட்டுள்ளது.