Ads Area

எக் காரணம் கொண்டும் கட்சியிலிருந்து வெளியேற வேண்டாம் - ஜனாதிபதி.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீது அதிருப்தி கொண்டுள்ள அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இச் சந்திப்பானது நேற்றைய தினம் ஜனாதிபதி செயலாகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் அமைச்சுக்களுக்கு ஒதுக்கும் நிதியை தடுக்கும் வகையிலான பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வந்தால் என்ன செய்வது என்பதும் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அதிருப்தியாளர்கள் சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடையக் கூடாது என்பது தொடர்பில் எடுத்துரைத்ததுடன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எக் காரணம் கொண்டும் கட்சியிலிருந்து வெளியேற வேண்டாம் என்று அவர்களிடம் கோரிக்கையை முன்வைத்தார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe