Ads Area

அல்ஹாஜ் செய்யித் அலிஸாஹிர் மெளலானாவுக்கு நன்றி தெரிவிப்பு.

ஏறாவூர் தைக்கா வீதியில் உள்ள வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு 7ஆம் வட்டார அபிவிருத்தி குழு தலைவர் ஐனாப் காலித்தீன் இஸ்மத் இப்திகார் அவர்களின் வேண்டு கோளுக்கு அமைவாக கம்பரெலிய செயற்திட்டத்தின் கீழ் எழுச்சி பெறும் ஏறாவூர் எனும் தொனிப் பொருளில் கெளரவ சமூக மேம்பாட்டு இராஜங்க அமைச்சர் அல்ஹாஜ் செய்யித் அலிஸாஹிர் மெளலான அவர்களின் நிதிஒதுக்கீட்டில் ரூபாய் 10 லட்சம் பெறுமதியான மைய்யவாடி உள்ளக வீதி துரிதமாக  அமைக்கப்பட்டுள்ளது. 

இவ்வேலைத்திட்டத்திற்கு பூரண ஆலோசனை வழங்கிய ஏறாவூர் நகர சபை கெளரவ உறுப்பினர் அல்ஹாஜ் MS நழீம் மற்றும் ஐனாப் S. சப்ராஸ் ஆகியோரையும் நினைவு கூர்ந்து வாளியப்பா பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள், மகல்லாவாசிகள் சார்பாக நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

 இவ்வேலைத்திட்டத்தினால் இரண்டு நன்மைகள் கிடைக்க பெற்றுள்ளது.

 01. மாரிகாலங்களில் சிரமம் இன்றி ஐனாஸாக்களை கொண்டு செல்வதற்கு பாதை.

02. மைய்யவாடிக்குள் நுழைபவர்கள் பாதணியின்றி செல்லுவதற்கு வழி வகுத்தமை



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe