நியூஸிலாந்தில் நடைமுறையிலுள்ள துப்பாக்கி பயன்பாட்டு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து க்ரைஸ்ட்சர்ச் பகுதியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் அண்மையில் (15) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்ததுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குறித்த தாக்குதலில் பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா, இந்தோனேஷியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த 5 வயது குழந்தை ஆக்லான்ட் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.