Ads Area

சம்மாந்துறை வீரமுனை வண்டு வாய்க்கால் வீதி மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மற்றும் கிராமிய அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின் கீழுள்ள கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் தனித்து விடப்பட்டதும் மற்றும் குறைபாடுடையதுமான கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை வீரமுனை வண்டு வாய்க்கால் வீதி 50 இலட்சம் ரூபாய் செலவில் கொங்கிறீட் வீதியாக செப்பனீடப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீதியை திறந்து மக்களின் பாவனைக்கு கையளித்தார்.

இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். முஹம்மட் நௌஷாட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீல், சம்மாந்துறை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட், மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நகீர், பிரதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதிமேதகு ஜனாதிபதியினால் அம்பாரை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் நிகழ்ச்சித்திட்டத்திக்கமைவாக இவ்வேலைத்திட்டம் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe