Ads Area

தீவிரவாதி ஸஹ்ரானின் செயலை நியாயப்படுத்திப் பேசிய முனாஜிப் மௌலவி கைது.

வவுனியா செட்டிகுளம் முதலியாகுளத்தில் வசித்து வரும் முனாஜிப் மௌலவி இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வவுனியாவைச் சேர்ந்த முனாஜிப் மௌளவி கடந்த ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதல் தொடர்பாக தனது முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியை வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இக் காணொளியில் அவர் இடம் பெற்ற தாக்குதலை நியாயப்படுத்தும் படியும் சஹ்ரானுக்கு ஆதரவாகவும் பேசியிருந்தார் இதனைால் இவரைக் கைது செய்யும் படியான கோரிக்கை பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் மௌளவி சவுதி அரேபியாவிலிருந்து இன்று காலை நாடு திரும்பி்யபோது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe