Ads Area

சம்மாந்துறை கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா பிரதேசத்தில் மரநடுகை.

(எம்.எம்.ஜபீர்)

ஜனாதிபதியின் நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபையின் கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா பிரதேசத்தினை பசுமையான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் வழிகாட்டலில் மரநடுகை வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் நடைபெற்ற மரநடுகை நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி றிபா உம்மா ஜலீல் கலந்துகொண்டு சிறுவர் பூங்கா வளாகத்தில்  மரக்கன்றுகளை  நாட்டிவைத்தார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe