அம்பாறை – சாய்ந்தமருது பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த நிலையில், காணாமற்போயிருந்த மீனவர்கள் மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருதிலிருந்து படகொன்றில் கடந்த 26 ஆம் திகதி கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் காணாமற் போயிருந்தனர்.
இவர்கள் 27 ஆம் திகதி காலை கரை திரும்பியிருக்க வேண்டும் என்ற போதிலும், மீண்டும் கரைக்கு திரும்பாததால் மீனவர்கள் இணைந்து அவர்களைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.