இலங்கை போக்குவரத்துச்சபையின் மிதிபலகை திடீரென உடைந்து விழுந்ததில் நடத்துநரும் பயணி ஒருவரும் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் சம்மாந்துறையை சேர்ந்த சேகர் என்ற நடத்துநரே உயிரிழந்தவராவார்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மட்டக்குளி டிப்போவுக்கு சொந்தமான குறித்த பேருந்து கடுகண்ணாவை பகுதியில் சென்று கொண்டிருந்த போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றள்ளது.
முன்பக்க மிதிபலகை உடைந்து வீழ்ந்ததில் அதில் நின்ற இருவரும் முன்சில்லில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.