கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரித்தமையினால் பாணின் விலையினை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை 7.54 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதாகவும் இது ஒப்பீட்டளவில் 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் இலங்கையில் பாணின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு முக்கிய காரணம் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதே ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாணின் விலை மட்டுமே அதிகரிக்கப்படுவதாகவும் ஏனைய சிறிய உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அததெரணன.