போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனும் ஜனாதிபதியினால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை நாட்டின் பிரஜையாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் வரவேற்கின்றேன். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவணை வேகமாக அதிகரித்து வருகின்றது. இலட்சக் கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையைக் காவுகொள்ளும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்கார்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.
நாட்டில் போதைப்பொருள் பாவணையின் காரணமாக ஆண், பெண் உட்பட 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறைக்குச் செல்கின்றனர். ஒரு இனத்தை அழிப்பதற்கும் போதைப்பொருள் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது.