Ads Area

கடந்த 10 ஆண்டுகளாக ஒரு ஆண் குழந்தை கூட பிறக்காத விநோத கிராமம்.

இயற்கை சில நேரங்களில் நம்ப முடியாத வினோதங்களை நிகழ்த்திவிடுகிறது. அப்படி ஒரு நிகழ்வாக போலந்து நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில், கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்கவில்லை என்ற வினோதத்தில் உள்ளது.

மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது மிஜெஸ் ஒட்ரஜான்ஸ்கி கிராமம். சுமார் 300 பேர் வரை வசிக்கும் இக்கிராமத்தில், கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அக்கிராம மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

அண்மையில் அந்நாட்டில் நடந்த ஜூனியர் தீயணைப்பு வீரர்களுக்கான போட்டியில், இக்கிராமத்தில் இருந்து சிறுமிகள் மட்டுமே பங்கேற்றனர். பங்கேற்ற அனைவரும் சிறுமியர்களாக இருந்ததால் இதுதொடர்பாக விசாரித்த போட்டியாளர்கள் கிராமத்தின் கதையை கேட்டு ஆச்சர்யம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் செய்திகளில் அடிபட தொடங்கியதால், செய்தி நிறுவனங்கள் பலவும் செய்தி வெளியிட்டதால், தற்போது இந்த கிராமத்தின் கதை வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தைகள் பிறக்காததால் எதிர்காலத்தில் ஆண்களின் சதவீதம் குறைந்துவிடும் எனவும், இந்த விவகாரத்திற்கு எப்படி தீர்வு காண்பது என்று தெரியாமல் குழம்பி போயுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கடந்த கால வினையின் பயனா என்று குழம்பி போயுள்ள கிராம மக்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அப்பகுதியின் மேயர், கிராமத்தில் முதலில் ஆண் குழந்தை பெற்றெடுக்கும் தம்பதிக்கு வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இயற்கையின் இந்த வினோதத்தை எண்ணி வியக்காதவர்கள் இருக்க முடியாது என்பதே உண்மை.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe