யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்நபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது,
மக்களுக்கு உதவி செய்ய வந்திருப்பதாகச் சொல்லி மக்களுக்கு ஆசைவார்த்தை கூறி அவர்களுக்கு பணத்தை கொடுத்து அவர்களை கடனாளியாக்குகிறீர்கள். கடனைப் பெற்ற வியாபாரி தனது வியாபாரத்தில் நட்டம் அடைந்தால் அவனால் வட்டியைச் செலுத்த முடியாமல் போகிறது.
இது பற்றி வங்கி கடன் பெற்றவர் விடயத்தில் வட்டியை செலுத்துவதற்கான காலத்தைக் கொடுக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும். வட்டிக்கு வட்டி என்று வட்டி முதலாகி வட்டி முதலையும் பெற்ற கடனையும் செலுத்துமாறு கடன் பெற்றவரை வற்புறுத்துகிறது.
இதனால் எனது 20 கோடி பெறுமதியான ஹோட்டல் ஒன்றை 2 கோடியே 10 இலட்சம் ரூபாவுக்கு விற்று அதே வங்கிக்கு கொடுத்துவிட்டு இன்று ஒன்றுமில்லாமல் நிற்கிறேன். நியாயம் கேட்டு வங்கிமீது நான் வழக்குத் தொடுத்துள்ளேன். எனது வியாபாரத்தை இழந்து நிற்கிறேன். ஆனால் நான் தற்கொலைக்கு போகவில்லை.
தமிழ்வின்.