தலைவனின் போட்டோவை வைத்து அரசியல்செய்யும் அரசியல்வாதிகள் அந்த தலைவனின் பாசத்துக்குறிய ஒரே மகனைக்கூட கௌரவப்படுத்துவதற்கு முன்வரவில்லை என்கின்றபோது, இவர்களின் வங்குரோத்து அரசியல் என்ற நாகப்பாம்பு எந்தளவுக்கு படமெடுத்து ஆடுகின்றது என்பதை புரிந்துகொள்ளலாம்.
எது எப்படியிருந்தாலும் ஒருமனிதன் பேரும்புகழோடு வாழவிரும்புவது தான் உயிரோடு இருக்கும்போதோ அல்லது மரணத்துக்கு பின்போ தனக்கு கிடைக்கும் புகழும் பெருமையும் தன்னுடைய மனைவி பிள்ளைகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதைத்தான் விரும்புவான். அதுதான் மனிதனின் இயற்கையான விருப்பமாகவும் இருக்கும்.
இந்த நிலையில் மறைந்த தலைவர் அஷ்ரப் உயிரோடு இருக்கும்போது தன்னுடைய ஒரே மகனை எவ்வளவு தூரம் நேசித்திருப்பார் என்பதை யாரும் சொல்லித்தான் தெரியவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன். அப்படி நேசித்த ஒரு மகனை அவர் கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கத்தில் இருப்பவர்கள் கால்தூசிக்கும் மதிக்காமல் நடந்துகொள்வது என்பது மறைந்த தலைவரின் ஆத்மா கூட ஏற்றுக்கொள்ளாது என்பதே உண்மையாகும்.
இப்படிச் செய்வதனால் இவர்களுடைய அரசியல் இருப்புக்கு ஆபத்தாக வந்துவிடுமோ என்ற பயத்தின் காரணமாகவே தலைவரின் போட்டோவை வைத்து அனுதாப அரசியல் செய்தாலும் செய்வோமே தவிர, அவருடைய மகனுக்கெல்லாம் அந்தக் கௌரவத்தை கொடுக்கமாட்டோம் என்ற கீழ் தரமான என்னத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்த இயக்கத்தின் தயவால் வாழுகின்ற இந்த ஒட்டுண்ணி அரசியல்வாதிகள் நினைத்து செயல்படுகின்றார்கள் என்பதே மிகப்பெரிய உண்மையாகும்.
இந்த சதிகாரர்களின் என்னத்தை புரிந்துகொள்ளாத முஸ்லிம் மக்கள், பெருந்தலைவர் அஷ்ரப்பின் மனைவியையும் அவரது ஒரே மகனான அமான் அஷ்ரப்பையும் நினைத்தும்கூட பார்ப்பதற்கு முயற்சிக்கவில்லை என்கின்றபோது மிகவும் கவலையான விடயமாக தெரிகின்றது. எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் ஒரு இயக்கத்தை கட்டிவளர்த்த ஒருதலைவனின் குடும்பத்தை கால்தூசிக்கும் கணக்கெடுக்காமல், அவர்களின் கண்முன்னே எவரெவரோ ஆட்டம்போடுவதை பார்த்து யார்தான் பொறுத்துக்கொள்வார்கள். தன்னுடை கண்முன்னே தன்னுடைய தகப்பனின் பெயரைச்சொல்லி அரசியல் வியாபாராம் இவர்கள் ஒரு சரத்துக்காவது எங்களை கண்டுகொள்ள மறுக்கும் விடயத்தை எவராலும் தாங்கிகொள்ள முடியாது என்பதே உண்மையாகும். இப்படியான வேதனைகளை யாராலும் தாங்கிகொள்ளவும் முடியாது என்பதை இப்படியான நிலையில் மாட்டிக்கொண்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும் என்பதையும் யாராலும் மறுக்கவும் முடியாது.
எனவேதான் சொல்லுகிறோம் அவர்களுக்கு அரசியல் அந்தஸ்தை வழங்காது விட்டாலும் அவர்களுக்கான உரிய மரியாதையைவாது கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றோம். அதுதான் அந்த தலைவனுக்கு செய்யும் கைமாறு என்பதையும் மறந்து விடாதீர்கள்.
எம்எச்எம்.இப்றாஹிம்
கல்முனை..