இலங்கையின் பிரபலமான ருகுணு பல்கலைகழகத்தில் இடம்பெறும் அதிர்ச்சியளிக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து நபரொருவர் முகநூலில் பதிவிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அதில் சென்ற மாதம் ருகுணு பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியான பகிடிவதை (sexual ragging) செய்தல் சம்மந்தமான வீடியோ காணக்கிடைத்ததாக குறித்த முகநூல்வாசி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்கலைகழகத்தில் உள்ள பெண்கள் விடுதியில், sick bay என்ற நோயாளிகள் ஓய்வெடுக்கும் அறையில் தொடர்ச்சியான பாலியல் ரீதியான பகிடிவதை நடைபெற்று வந்திருக்கிறமை தெரியவந்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலோட்டமாக casual sex வீடியோக்கள் இணையத்தில் இருந்தாலும், பகிடிவதை நேரம் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுத்தி எடுக்கப்படும் இந்த sexual ragging வீடியோக்கள் இணையதளங்களில் வெளிப்படுவதில்லை, என்றும் whatsapp, telegram குழுமங்களினூடு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உலவுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சில நேரங்களில் மாணவர்கள் மத்தியில் குறித்த வீடியோக்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், தீவிர பகிடிவதை ஆதரவாளர்கள் இதனை பகுதிநேர தொழிலாக்கி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுளார். குறித்த விடயம் பல்கலைகழக விரிவுரையாளர்களுக்கும் கல்லூரி கல்விசாரா ஊழியர்களுக்கும் இடம்பெறுவதாகவும் குறித்த நபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இவை அனைத்துமே பெண்கள் விடுதியில் நடைபெறுகிறதாக குறிப்பிட்டுள்ள அவர், சில extreme level களில் மாணவிகள் வன்புணர்வுக்கும் ஆளாகி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சிரேஷ்ர பெண் மாணவிகளும் இந்த பாலியல் பகிடிவதை கலாசாரத்தில் முக்கிய வகிபாகம் கொள்கிறார்கள் என்றும், அவர்கள் தான் இதை கடத்துவதற்கும், ரகசியம் பேணுவதற்கும், தொடர்ச்சியாக நடைபெறுவதற்கும் காரணமாயிருப்பதாகவும் முகநூல்வாசி சுட்டிக்காட்டியுளார்.
அவர்களின் தொனி மிகவும் பழக்கப்பட்ட விடயத்தை அணுகுவதுபோலவும் அதை அந்த மாணவிகளை சாதாரணமாக எடுக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவதுபோலவும் இருக்கிறதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இதையெல்லாம் பொதுவெளியில் கூறும்போது “நாங்க ragging செய்ததுக்கு ஆதாரம் காட்டு” என்று முரண்பட வரும் பகிடிவதை ஆதரவாளர்கள் மேல் தவறில்லை கூறியுள்ள குறித்த நபர் வெளியில் கூற திராணியற்று ஆதாரங்களை புதைப்பவர்கள் பகிடிவதை வாங்குபவர்கள் தானே எனவும் சுட்டிகாட்டியுள்ளார்.
அத்துடன் வருங்காலங்களிலாவது உங்கள் , சகோதரிகள், பிள்ளைகளை யாரும் பகிடிவதை என்ற பெயரில் இவ்வாறு சீரழியாமல் பாதுகாத்துகொள்ளுமாறும் தனுசியன் கருணாகரன் எனும் குறித்த முகநூல்வாசி சமுதாயத்திடம் வேண்டுகோள் ஒன்றினையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.