கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் இராணுவத்தினர் மீண்டும் நாய்களைக் குளிப்பாட்டும், கால்வாய்களை சுத்தம் செய்யும் நிலையே ஏற்படும் எனத் தெரிவித்த நிதியமைச்சர் மங்கள சரமவீர, கோத்தாபய மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் இராணுவத்தினரே அதிக ஆர்வம் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்தபோது விசேட தேவையுடைய இராணுவத்தினர் அவரை சந்திப்பதற்காக 6 தடைவைகள் கடிதம் மூலம் அனுமதி கோரிய போதும் அவர் வேலைப்பளுவில் இருப்பதாக தெரிவித்து அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால் நாம் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று தீர்வு வழங்கத்தயாரான போது சில இராணுவத்தினரை தூண்டிவிட்டு போராட்டம் நடத்த வைக்கின்றனர். தாங்களே இராணுவத்தினருக்கு தீர்வு பெற்றுக்கொடுத்ததாக காட்டவே ராஜபக்ஷ்வினர் இந்த வேலைகளை செய்வதாகவும் குற்றம் சாட்டியதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

