வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்துக்கு வந்ததன் பின்னர் தனது கட்சியை மாற்றிக் கொள்பவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கு தமது அரசாங்கத்தில் சட்டம் உருவாக்குவதாக தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகில் வேலை செயற்படாமல் சம்பளம் எடுக்கும் ஒரே பதவி பாராளுமன்ற உறுப்பினர் பதவியாகும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை பாராளுமன்றத்துக்கு சென்றால் போதும். வருடத்துக்கு நான்கு நாட்கள். ஐந்து வருடத்துக்கும் 20 நாட்கள் பாராளுமன்றம் சென்று வந்தால் போதுமானது. அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.