Ads Area

தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது அராஜகங்கள் கட்டவிழ்த்துவிடப்படும்.

தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது அராஜகங்கள் கட்டவிழ்த்துவிடப்படும்.

குறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் தீவிரவாதக்குழு ஒன்று தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது தமது அராஜகங்களை கட்டவிழ்த்துவிடும் என்று ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அவர், இந்த அராஜகங்கள் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிப்பெற்றாலோ, தோல்வியடைந்தாலோ நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஏற்கனவே இராணுவத் தளபதியாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் புலனாய்வுப்பிரிவின் தலைவராக இருந்த அடிப்படையிலும் இந்த தகவலை பொறுப்புடன் கூறுவதாக மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe