Ads Area

சிங்களவர்களின் வாக்குகளினால்தான் நான் வெற்றி பெற்றேன் என ஜனாதிபதி கோத்தபாய கூறியது ஏற்புடையதல்ல.

சிங்களவர்களின் வாக்குகளினால்தான் நான் வெற்றி பெற்றேன் என ஜனாதிபதி கோத்தபாய கூறியது ஏற்புடையதல்ல.

சிங்கள வாக்குகள் மூலமே நான் வெற்றி பெற்றதாக புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் உரையாற்றுகையில் இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ இதனைக் கூறி இருந்தார்.

இந்த நிலையில் கோத்தபாயவின் உரைதொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள அரசியல் அவதானிகள், நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒருவருக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்றால் தேர்தல் எதற்கு? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் எந்த ஒரு நாட்டிலும் தேர்தல் இடம்பெறும்போது மக்களிற்கு வாக்களிக்கும் உரிமை எவ்வளவு சுதந்திரமுள்ளதோ அதேபோல விரும்பியவரை தேர்ந்தெடுப்பதற்கும் அவர்களிற்கு முழு சுதந்திரம் உள்ளது.

இவ்வாறான நிலையில் கோத்தபாய சிங்கள வாக்குகள் மூலம் வெற்றி பெற்றிருந்தாலும் , அவர் அப்படி கூறியதை எண்ணி எந்த தமிழரோ அல்லது முஸ்லிம்களோ கவலைப்பட வில்லை எனவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனேனில் குறித்த இந்த இரண்டு சமூகத்தின் வாக்கும் ஒரு சிங்கள வேட்பாளருக்கே அளிக்கப்பட்டதே தவிர தமிழருக்கோ அல்லது முஸ்லிம்களிற்கோ அல்ல எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இவ்வாறு உரையாற்றியமையானது தமிழ்-முஸ்லிம் மக்களை சிங்கள மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டக் கூடியதாகவும்,  தமிழ்-முஸ்லிம் மக்களை துாரமாக்கக் கூடியதாகவும் இருக்கின்றது எனவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe