Ads Area

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.

சிறுநீரக மாற்று சிகிச்சை வைத்திய நிபுணர் உதான ரட்னபால தலைமையிலான 13 வைத்தியர்கள் இணைந்து நேற்று முன்தினம் நடைபெற்ற இம் மாற்று சத்திர சிகிச்சை பூரணமாக வெற்றியளித்துள்ளது.

பி.எய்ச்.எம்.இஸ்மத் என்ற 42 வயதான சிறுநீரக நோயாளிக்கு சிறுநீரகங்கள் பழுதடைந்தமையினால் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரகமொன்றை நன்கொடையாக வழங்க எம். ரினாஸ் என்பவர் முன்வந்தார். இதற்கமைய மாற்று சிறுநீரக சத்திர சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டது.

Thinakaran.lk
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe