வாழைச்சேனை, கண்ணகிபுரம் பகுதியில் பெண்ணொருவர் பொல்லினால் தாக்கி தனது கணவனை கொலை செய்துள்ளார். நேற்று (13) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதை அடுத்து, தனது மகனை கூரிய ஆயுதமொன்றினால் கணவன் தாக்க முற்பட்ட வேளையில், மனைவி தனது கணவனை பொல்லினால் தாக்கியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவர்களின் 16 வயதுடைய மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்ணகிபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய சுரேஷ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.