மொட்டுவின் சந்தர்ப்பவாதமறிய வியாழேந்திரன் சிறந்த உதாரணம். அரசனை நம்பி புரிசனை இழந்த நிலையில் வியாழேந்திரன்...!
மொட்டுவை நம்பி நடுத்தெருவுக்கு வந்தவர்களில் முதன்மையானவராக வியாழேந்திரனை குறிப்பிடலாம். கடந்த 52 நாள் ஆட்சி மாற்றத்தின் போது தனது கட்சியான த.தே.கூவிலிருந்து விலகி மஹிந்த அணியை ஆதரித்திருந்தார். அவ் வேளை அவருக்கு கிழக்கு அபிவிருத்தி அமைச்சே வழங்கப்பட்டிருந்தது. அவ் அமைச்சை அவர் முழுமையாக மென்று, சுவைக்க முடியாமல் போனது நாடறிந்ததே!
அன்று அவர் எச்சிலூறி சுவைக்க கற்பனை கோட்டை கட்டியிருந்த அவரின் அமைச்சு பதை பதைக்க பறிபோயிருந்தது. தற்போது வழங்கப்பட்ட அமைச்சில் குறைந்தது இராஜாங்க அமைச்சையாவது வியாழேந்திரனுக்கு வழங்கி கைம்மாறு செய்திருக்க வேண்டும் மொட்டரசு. ஆனால், ஆயிரம் கற்பனையோடு வியாழேந்திரன் இருந்த போது மொட்டரசு எந்த குட்டி அமைச்சையும் அவருக்கு வழங்கவில்லை. பாவம் வியாழேந்திரன். அரசனையும் நம்பி புரிசனை இழந்த நிலையிலுள்ளார். மொட்டு ஆட்சி அமைத்த நாளிலிருந்து அவரின் சத்தத்தை கண்டுகொள்ள முடியாதுள்ளது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.