Ads Area

தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக இரண்டாவது தடவையாகவும் அன்வர் முஸ்தபா நியமனம் !!

நூருல் ஹுதா உமர். 

இலங்கை தென்கிழக்கு பல்கலைகழக பேரவை உறுப்பினராக சம்மாந்துறையை சேர்ந்த கலாநிதி அன்வர் எம் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். 

இவர் இதற்கு முன்னரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைகழக பேரவை உறுப்பினராக இருந்துள்ளதுடன் கணக்காய்வு முகாமைத்துவ குழுவின் தலைவராகவும்  நிதிக்குழு உறுப்பினர்களாகவும் அக்காலப்பகுதியில் பதவி வகித்துள்ளார். 

சமூக சேவைகள், கல்வி மேம்பாட்டு துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வரும் இவர் அரச மற்றும் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர் ஆலயங்களில் உயர் பதவிகளை வகித்துள்ளார். இவர் தேசிய காங்கிரஸ் கட்சியின் மேலதிக தேசிய அமைப்பாளருமாவார்.    




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe