Ads Area

டுபாயில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இனம் காணப்பட்டார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இதுவரை கொரோனா பரவியிருக்காத சூழ்நிலையில் மத்திய கிழக்கில்,  ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா வைரஸ் தோற்றிய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து வந்த ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதே வேளை சவுதி அரேபியாவில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு யாரும் இலக்காகவில்லை என சவுதி அரேபிய சுகாதார அமைச்சர் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தார்.

செய்தி மூலம் - https://gulfnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe