Ads Area

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரர்ப்பன நிகழ்வு.

(எம்.எம்.ஜபீர்)

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரர்ப்பன நிகழ்வும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வரவேற்கும் நிகழ்வும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இணையத்தளத்தினை அங்குரர்ப்பனம் செய்துவைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், தொற்றுநோய் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப், தாய்சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சீ.எம்.பஷால், உளநல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜெ.அர்ஷாத் காரியப்பர், உயிரியல் மருத்துவப் பொறியியலாளர் ஆர்.ரவிச்சந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.சபி, சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர், உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது  நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவியேற்ற வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனை வரவேற்று நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.மதனினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் நீதி நேர்மையை பறைசாற்றும் வகையில் தாரசு சின்னமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe