Ads Area

இரண்டு விடையங்களுக்கு முஸ்லிம் காங்ரஸின் ஆதரவு அரசுக்கு தேவைப்படும்.

1) பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெறல்
2) கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைத்தல் 

இந்த இரண்டு விடயங்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு தேவைப்படும் என்பதை - இன்றைய அரசு மிகத்தெளிவாக புரிந்துவைத்துள்ளது. அதனால், மு.கா தொடர்பாக அடக்கி வாசிக்குமாறு - மேல் மட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

"அடிப்படைவாதிகள் இல்லாத அரசை அமைப்பதாக" முன்வைக்கப்படும் கருத்து - எதிர்வரும் பொதுத்தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளை கூட்டி - அதனூடாக ஆசனங்களை அதிகரித்து கொண்டு - பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை நோக்கி நகர்வதற்கான - ஒரு தேர்தல் தந்திரோபாயமே அன்றி வேறில்லை" எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே வீணாக மு.காவை சீண்ட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதான் முஸ்லிம் காங்கிரஸின் - யாராலும் "தவிர்க்க முடியாத அரசியல் வகிபாகம்". 

இதுதான் பலமிக்க "இயக்க அரசியலின்" முக்கியத்துவம்.

மு.கா இதற்கு சம்மதிக்குமா? இல்லையா? என்பதெல்லாம் வேறு விடயம். 
ஆனால், அதன் வகிபாகம் தவிர்க்க முடியாதது என்பதுதான் முக்கியமான விடயம்.

🏿யாருடையதாவது தயவை எதிர்பார்த்து காத்திருக்கும் "தனிநபர் அரசியல்" சமூகத்திற்கு அபாயமானது. 

🏿"பயன்படுத்தல்" என்ற சதி அல்லது தந்திரத்திற்கு - விலைபோகும் அபாயம் அதில் தவிர்க்க முடியாத அம்சம். 

இன்னும் ஆழமாக கூறினால் - எல்லாவற்றிற்கும் "தலையாட்டி" நிலையும் ஏற்படும்.

"முஸ்லிம்களில் எத்தனை எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள் என்பதல்ல; தக்க தருணத்தில் அவர்கள் எப்படி பதிலளிக்கிறார்" என்பதே விடயம். 

அது இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான காலத்தில் உணரப்பட்டதனாலேயே - மு.காவின் தேவையும் - அதன் அவசியமும் உணரப்பட்டு - உயிர்கொடுக்கப்பட்டது.

மு.கா என்ற அதிர்வில் அதிகாரம் பெற முடியாதோரும் - அதிகாரத்தை கைப்பற்றியும் மு.காவின் துணையின்றி நிலைக்க முடியாதோரும் - மு.காவை பலவீனப்படுத்தாமல் தமக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பதால் - ஊருக்கொரு முஸ்லிம் தலைவர்களை உருவாக்கி - இலங்கை முஸ்லிம்களின் பலத்தை கூறுபோட தீட்டிய சதியில் வீழ்ந்த தனிநபர்கள் - அமைச்சுக்களையும் அரச கவனிப்புக்களையும் பெற முடிந்ததே தவிர - ஸ்தீரமான அரசியல் இருப்பை அடைய முடியவில்லை.

கைப்பற்றியும் மு.காவின் துணையின்றி நிலைக்க முடியாதோரும் - இத்தனிநபர்களை தமது பிடிக்குள் வைத்திருக்க உருவாக்கியதுதான் என்பதை இத்தனிநபர்கள் உணரவில்லை. விளங்கவில்லை. அதற்கான நிதானமும் அவர்களிடம் இல்லை.

ஆனால், மு.கா அப்படியல்ல; 

எதிர்க்கும் போது எதிர்ப்பதும் - இணக்கப்பாடு அவசியமெனில் இணங்கி போவதும் மு.காவிற்கு சவால் அல்ல.  ஏனெனில் அது சொந்தக்காலில் நிற்கும் பலமிக்க ஒரு சமூக இயக்கம். 

அதன் மௌனமும் ஆர்ப்பாரிப்பும் வேறுபட்ட அரசியல் மொழிகள் என்பதை - அரசியலை ஆழ்ந்து கவனிப்பவர்கள் மட்டும் புரிந்துகொள்ளலாம். 

விளங்கி இருக்கிறது என்பதால்தான் - மு.காவை விமர்சிப்பதை நிறுத்துமாறு மேல் மட்ட உத்தரவு பறந்திருக்கிறது.

இதை எப்போதோ கீழ் வருமாறு சொல்லி இருந்தேன்:-

"அரசு மாறினால் குப்பையில் கிடப்பதற்கும்; 
அறவே வேண்டாம் என்று தள்ளி வைப்பதற்கும்; 
மு.கா ஒன்றும் கொல்லையில் முளைத்த கொடியல்ல; 
முல்லையில் வளர்ந்து முற்றிய முதிரை மரம்." 

- ஏ.எல்.தவம் -



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe